இரத்த தான முகாம்

இரத்த தான முகாம்

ரத்த தான முகாம் 

ராசிபுரம் பகுதியில் இரத்த தான முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்‌.

பிள்ளாநல்லூர் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூட்டுறவு துறை சார்பில் ரெட்கிராஸ் ஒருங்கிணைப்பு டன் இரத்த தான முகாம் நடைபெற்றது. இம்முகாமினை இணை பதிவாளர் கூட்டுறவு துறை கா‌.ப.அருளரசு அவர்கள் தலைமையில் துவக்கி வைக்கப்பட்டது. இம்முகாமில் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு தன்னார்வத்துடன் 45 யூனிட் இரத்த தானம் வழங்கி சிறப்பித்தனர்.

இரத்த கொடையாளர்களுக்கு அரசு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இம் முகாமில் துணை பதிவாளர் எஸ். நாகராஜன் ரெட்கிராஸ் செயலர் சி.ஆர்.இராஜேஸ் கண்ணன் ,அரசு இரத்த வங்கி மருத்துவர் அன்பு மலர்,பிள்ளாநல்லூர் மருத்துவ அலுவலர் செல்வி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story