விழுப்புரம் அரசு பொறியியல் கல்லூரியில் ரத்ததான முகாம்

விழுப்புரம் அரசு பொறியியல் கல்லூரியில் ரத்ததான முகாம்

ரத்த தான முகாம் 

விழுப்புரம் அரசு பொறியியல் கல்லூரியில் நடைப்பெற்ற ரத்த தான முகாமில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர்.

விழுப்புரம் அண்ணா பல்கலைக்கழக அரசு பொறியியல் கல்லூரியில் செஞ்சுருள் சங்கம் மற்றும் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது. இதற்கு கல்லூரி முதல்வர் செந்தில் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார்.

விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரிரத்தம் செலுத்தும் மருந்தியல் மருத்துவர் விஜயா, விழுப்புரம் அரசு மருத்துவமனை மருத்துவர் லதா ஆகியோர் தலைமையிலான மருத்துவக்குழுவினர் கலந்துகொண்டு ரத்தம் சேகரித்தனர்.

இம்முகாமில் 80-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு ரத்ததானம் செய்தனர். முகாமிற்கான ஏற்பாட்டை செஞ்சுருள் சங்க அலு வலர் பழனி செய்திருந்தார்.

Tags

Next Story