சிவகாசி: முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு ரத்ததான முகாம்

சிவகாசி: முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு ரத்ததான முகாம்
சிவகாசியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு இரத்ததான முகாமில் அமைச்சர் பங்கேற்பு...
சிவகாசியில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் 71 வது பிறந்த நாளை முன்னாட்டு நடைபெற்ற இரத்த தான முகாமில் நிதி அமைச்சர் தங்கம்தென்னரசு பங்கேற்றார்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில்தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு,விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக மருத்துவர் அணி சார்பாக மாபெரும் ரத்ததான முகாமை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா, விருதுநகர் மாவட்டம் முழுவதிலும் கொண்டாடப்பட்டு வருகின்ற,இந்நிலையில் விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக மருத்துவர் அணி சார்பாக சிவகாசியில் இன்று காலை மாபெரும் ரத்ததான முகாம் திமுக மாநகர செயலாளர் எஸ்.ஏ.உதயசூரியன் தலைமையில நடைபெற்றது.

இரத்ததான முகாமை தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.ரத்ததானம் செய்த நபர்களுக்கு பழங்கள் மற்றும் சான்றிதழ்களையும் வழங்கினார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் வனராஜா, மாநகராட்சி மேயர் சங்கீதா, துணை மேயர் விக்னேஷ்பிரியா,சிவகாசி யூனியன் துணைத் தலைவரும் திமுக ஒன்றிய செயலாளருமான விவேகன்ராஜ் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மாவட்ட வர்த்தக அணி துணைத் தலைவர் இன்பம்,திருத்தங்கல் முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவர் பொன்சக்திவேல் ஆகியோர் உள்பட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story