ரோட்டரி கிளப் ஆப் இராசிபுரம் ராயல் சார்பில் ரத்ததானம் முகாம்

ரோட்டரி கிளப் ஆப் இராசிபுரம் ராயல் சார்பில் ரத்ததானம் முகாம்
ரோட்டரி கிளப் ஆப் இராசிபுரம் ராயல், இராசிபுரம் அரசு மருத்துவமனை இணைந்து ரத்ததான முகாம் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெற்றது. இந்த ரத்ததான முகாமை ரோட்டரி உதவி ஆளுநர் ஏ.ராஜூ, தொடங்கி வைத்தார். இதில் ரோட்டரி கிளப் ஆப் இராசிபுரம் ராயல் தலைவர் ஆர்.விஜய், செயலாளர் பி.சக்திவேல், பொருளாளர் சி. ஜெகதீஸ்வரன், ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள், உறுப்பினர்கள், மற்றும் முத்தாயம்மாள் கலை அறிவியல் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ரத்ததானம் வழங்கினர். இந்த நிகழ்வில் ராசிபுரம் தலைமை மருத்துவர் கலைச்செல்வி, உறுப்பினர்கள் வழக்கறிஞர் அன்பழகன், முன்னாள் தலைவர் கார்த்தி கேயன், மோகன், ஜெயக்குமார், ராஜேஷ், பாலாஜி, சிவக்குமார். மோகன்குமார், சரத்குமார், சூர்யபிரகாஷ், சபரிநாதன், மணிகண்டன், மற்றும் சுதாஜெயக்குமார், மற்றும் முத்தாயம்மாள் கலை & அறிவியல் கல்லூரி மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story