பெரம்பலூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் ரத்த தானம் வழங்கும் நிகழ்ச்சி

ரத்த பெரம்பலூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் ரத்த தானம் வழங்கும் நிகழ்ச்சி
ராகுல் காந்தியின் 54 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் ரத்த தானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியின் 54 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு இரத்ததானம் வழங்கும் நிகழ்ச்சி வெங்கடேசபுரம் பகுதியில் உள்ள ரோவர் பள்ளி அரங்கில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தகவல் மற்றும் ஊடகத்துறை இணை தலைவர் ஜான் அசோக் வரதராஜன் தலைமையில் ஜூன் 19ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது, இதில் இளைஞர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, உறுப்பினர்கள் மற்றும் இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் ஆண்கள், பெண்கள் என ராகுல் காந்தியை கௌரவிக்கும் பொருட்டு அவரது 54 வது பிறந்த நாளில் 54 பேர் ரத்ததானம் வழங்கினார்கள், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையுடன் இணைந்து நடைபெற்ற இந்த இரத்ததான முகாமில் பெறப்பட்ட இரத்தம் அனைத்தும், பாதுகாப்பாக இரத்த வங்கிக்கு அனுப்பப்பட்டன. இந்நிகழ்ச்சியின் போது பெரம்பலூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் பழனிச்சாமி மற்றும் சட்டமன்ற தலைவர்கள் ராஜா, பார்த்திபன் சமூக ஊடகப் பிரிவு மாநில செயலாளர் ராஜீவ் காந்தி உள்ளிட்ட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் சமூக அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்

Tags

Next Story