திருச்செங்கோட்டில் ரத்ததான முகாம் !

திருச்செங்கோட்டில் ரத்ததான முகாம் !

 ரத்ததான முகாம்

திருச்செங்கோடு அறக்கட்டளை சார்பில் இரத்த தான முகாம் நடைபெற்றது.
அருள்மிகு அர்த்தநாரீசுவரர் கலை மற்றும் அறிவியல், திருச்செங்கோடு அரசு மருத்துவமனை வழிகாட்டுதலின்படி கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளை சார்பில் இரத்த தான முகாம் நடைபெற்றது. இம்முகாமில் கல்லூரியின் முதல்வர் முனைவர் கி. வெங்கடாசலம் தலைமை உரையை வழங்கினார். திருச்செங்கோடு அரசு மருத்துவமனை மருத்துவர் செந்தில்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் . மேலும் நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளை திட்ட மேலாளர் திரு. வெங்கட் வாழ்த்துரை வழங்கினார். நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் ர. மோகன் நன்றியுரை வழங்கினார். இம்முகாமின் வாயிலாக 52 யூனிட் இரத்தம் குருதி கொடையாக வழங்கப்பட்டது.

Tags

Next Story