அறங்காவலர் குழு நிர்வாகிகள் பொறுப்பேற்பு

அறங்காவலர் குழு  நிர்வாகிகள் பொறுப்பேற்பு

நிர்வாகிகள் பொறுப்பேற்பு

கள்ளக்குறிச்சி அருகே அறங்காவலர் குழு நிர்வாகிகள் பொறுப்பேற்றுக்கொண்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், மணலூர்பேட்டை, அருள்மிகு பிரயோகவரதராஜப் பெருமாள் திருக்கோவிலுக்கு புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அறங்காவலர் குழு தலைவராக ந.சிவராமன் அறங்காவலர் குழு உறுப்பினா்கள் ச.முத்தம்மாள், மு.ஏழுமலை ஆகியவா்களை தேர்வு செய்து மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பாலாஜி பூபதி அவர்கள் அறங்காவலா் பதவி பிரமானம் செய்து வைத்தாா்.

உடன் பேரூர் கழகச் செயலாளர் ஜெய் கணேஷ் அவர்கள் செயல் அலுவலர் அருள் எழுத்தா் மிரேஷ் குமார் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் உடன் இருந்தனர்.

Tags

Next Story