குமரி விவேகானந்தர் மண்டபத்திற்கு இன்று 3ம் நாளாக படகு சேவை ரத்து

குமரி விவேகானந்தர் மண்டபத்திற்கு இன்று 3ம் நாளாக படகு சேவை ரத்து

குமரி விவேகானந்தர் மண்டபத்திற்கு இன்று 3ம் நாளாக படகு சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. 

குமரி விவேகானந்தர் மண்டபத்திற்கு இன்று 3ம் நாளாக படகு சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரியில் கடந்த 16-ம் தேதி முதல் 2 நாட்கள் தொடர்ந்து இடைவிடாமல் மழை பெய்தது. இந்த நிலையில் மழை சற்று ஓய்ந்த நிலையில் நேற்று முதல் கடற்கரை பகுதியில் பயங்கர சூறாவளி காற்று வீசுகிறது. இன்றும் இரண்டாவது நாளாக சூறாவளி காற்று தொடர்ந்து வீசுகிறது. இன்னொரு புறம் கடல் சீற்றமாகவும் கொந்தளிப்பாகவும் காணப்படுகிறது. இதனால் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தா நினைவு மண்டபத்திற்கு இன்று மூன்றாம் நாளாக படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு பலகையை படகுத்துறையின் நுழைவு வாசலில் வைக்கப்பட்டுள்ளது. இதுபோன்று கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டைக்கு உல்லாச படகு சவாரியும் நடத்தப்படவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் இன்றி கன்னியாகுமரி கடற்கரை பகுதி வெறிச்சோடியது. கடற்கரை சுற்றுலாத்தலங்கள் பார்க்க முடியாமல் சுற்றுலா பயணிகள் தங்கள் தங்கியிடுக்கும் அறைகளிலேயே முடங்கி கிடந்தனர்.

Tags

Next Story