போடிநாயக்கனூர்: அனுமதி இல்லாமல் மணல் அள்ளிய லாரி பறிமுதல்

போடிநாயக்கனூர்:  அனுமதி இல்லாமல் மணல் அள்ளிய லாரி பறிமுதல்

காவல் நிலையம் 

போடிநாயக்கனூர் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய லாரியை பறிமுதல் செய்த போலீசார் தப்பியோடிய இருவரை தேடி வருகின்றனர்.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே சிலமலை சூலபுரம் பகுதியில் அனுமதி கொடுத்த இடத்தை விட்டுவிட்டு வேறு இடத்தில் சட்ட விரோதமாக மண் அள்ளுவதாக சிலமலை விஏஓ ஆனந்தகுமார் கொடுத்த புகாரின் பேரில் போடி காவல்துறையினர் மணலுடன் டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய சந்திரன் மற்றும் குவாரி உரிமம் பெற்ற கணேசன் ஆகியோரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Tags

Next Story