தண்டவாளம் அருகே அடையாளம் தெரியாத வாலிபர் பிணம்!

தண்டவாளம் அருகே அடையாளம் தெரியாத வாலிபர் பிணம்!
பைல் படம்


அரக்கோணம் பகுதியில் தண்டவாளம் அருகே கிடந்த அடையாளம் தெரியாத வாலிபரின் பிணத்தை மீட்டு ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் - திருத்தணி ரயில் மார்கத்தில் அரக்கோணம் வடக்கு கேபின் பகுதியில் தண்டவாளம் அருகே அடையாளம் தெரியாத 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் பிணமாக கிடப்பதாக அரக்கோணம் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலான போலீசார் உடலை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து பிணமாக கிடந்த வாலிபர் யார்?, எந்த ஊரைச்சேர்ந்தவர் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story