காணாமல் போன பள்ளி மாணவன் சடலமாக மீட்பு - போலீசார் விசாரணை

காணாமல் போன பள்ளி மாணவன் சடலமாக மீட்பு - போலீசார் விசாரணை

சடலமாக மீட்கப்பட்டுள்ள மாணவன்

காணாமல் போன பள்ளி மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே கல்குறிச்சி பகுதியில் வசித்து வருபவர் பாண்டியம்மாள். இவர் திருப்புவனம் காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மகன் கோபிநாத் தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று கோபிநாத் திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது பெற்றோர்கள்கள் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இன்று‌ காலை வீட்டின் அருகே உள்ள கண்மாய் தண்ணிரில் சடலமாக மிதந்து கொண்டிருந்த மாணவனை தீயணைப்பு துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags

Next Story