ஏரியில் இறந்த நிலையில் மூதாட்டி உடல் மீட்பு

ஏரியில் இறந்த நிலையில் மூதாட்டி உடல் மீட்பு

பைல் படம்

உளுந்துார்பேட்டை அருகே ஏரியில் இறந்த கிடந்த மூதாட்டி உடல் குறித்து போலீஸ் விசாரணை நடக்கிறது.
உளுந்துார்பேட்டை அருகே ஏரியில் இறந்த கிடந்த மூதாட்டி உடல் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். உளுந்துார்பேட்டை அடுத்த பாண்டூர் பகுதியைச் சேர்ந்தவர் கூத்தன் மனைவி கலியம்மாள், 65; இவருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். கடந்த 21ம் தேதி முதல் கலியம்மாளைக் காணவில்லை. இந்நிலையில் நேற்று மதியம் 2:00 மணி அளவில் பாண்டூர் ஏரியில் அழுகிய நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. உளுந்துார்பேட்டை சப் இன்ஸ்பெக்டர்கள் அன்பழகன், ராஜேஷ் ஆகியோர் நேரில் சென்று கலியம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வி.ஏ.ஓ. நந்தினி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story