விவசாய கிணற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட மாணவியின் உடல் !!

விவசாய  கிணற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட மாணவியின் உடல் !!

 மாணவி

சூளகிரி அருகே விவசாய கிணற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட மாணவியின் உடல், சூளகிரி போலிசார் பெற்றோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த கட்டிகானப்பள்ளி கிராமத்தை சேர்ந்த வெங்கடேஷ் என்பவரின் மூத்த மகளான லட்சுமி(17) பன்னிரென்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்த லட்சுமி, அந்தியூரில் உள்ள கல்லூரியில் முதலாமாண்டிற்கான சேர்க்கையில் பங்கேற்று வந்திருந்ததாக கூறப்படும் நிலையில் நேற்று இரவு முதல் லட்சுமி காணவில்லை என தேடி வந்ததாக பேசப்படும்நிலையில், கட்டிகானப்பள்ளி கிராமத்தின் மாணவியின் உறவினர்களின் விளைநிலத்தில் உள்ள விவசாய கிணற்றில் பெண் சடலம் மிதப்பதாக வந்த தகவலின் பேரில் சூளகிரி காவல்நிலைய பொருப்பு ஆய்வாளர் சந்திரலேகா அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்திய நிலையில் உயிரிழந்தவர் என்பவரின் மகள் லட்சுமி என தெரியவந்தது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலிசார், லட்சுமி பெற்றோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story