குளச்சல் அருகே கடற்கரையில் வாலிபர் சடலம்

குளச்சல் அருகே கடற்கரையில் வாலிபர் சடலம்

 வாலிபர் சடலம்

குளச்சல் அருகே கடற்கரையில் வாலிபர் சடலம். போலீசார் விசாரணை.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே கோடிமுனை பகுதியை சேர்ந்தவர் மார்டின் மகன் சைரஸ் (27).இவர் கடந்த சில மாதங்களாக மனநலம் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இவர் பகல் வேளையில் அங்குள்ள கடற்கரை பகுதியில் நடந்து சென்று, வீட்டுக்கு திரும்புவது வழக்கம். நேற்று கடற்கரைக்கு சென்றவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் நேற்று மாலை கோடிமுனை கடற்கரையில் அவரது உடல் கரை ஒதுங்கி கிடந்தது. இதை பார்த்தவர்கள் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் கடலில் தவறி விழுந்து உயிரிழந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. உடல் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து அவரது தந்தை மார்ட்டின் குளச்சல் மரைன் போலீசில புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பிரேத பரிசோதனைக்கு பின் சைரஸ் எப்படி இறந்தார் என்று தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story