நாகர்கோவில் ரயில் தண்டவாளத்தில் வாலிபர் சடலம்

நாகர்கோவில் ரயில் தண்டவாளத்தில் வாலிபர் சடலம்

நாகர்கோவில் ரயில் தண்டவாளத்தில் வாலிபர் சடலம்

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் ரயில் தண்டவாளத்தில் வாலிபர் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், பார்வதிபுரம் ரயில்வே பாலத்தின் கீழ் உள்ள தண்டவாளத்தில் நேற்று வாலிபர் சடலம் ஒன்று கிடந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும் நாகர்கோவிலில் இருந்து ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.இதில் இறந்து கிடந்தவர் நித்திரவிளை அடுத்த எஸ்டி மங்காடு பகுதி சேர்ந்த சிபின் குமார் (39) என்பது தெரிய வந்தது. சிபின் குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். சிபின்குமார் ரயில் மோதி இறந்ததாக கூறப்படுகிறது. அவர் ரயில் மோதி தான் இறந்தாரா? பார்வதிபுரம் ரயில்வே மேம்பாலம் கீழ் அவர் வருவதற்கு காரணம் என்ன? என்பன போன்ற சந்தேகங்கள் எழுந்துள்ளது. இது தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags

Next Story