கிணற்றில் மாணவியின் சடலம் மீட்பு

கிணற்றில் மாணவியின் சடலம் மீட்பு

ஆட்டுக்காரன்பட்டியை சேர்ந்த நர்சிங் மாணவி அருகிலுள்ள தோட்டத்து கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், போலீஸ் விசாரணை நடக்கிறது.  

ஆட்டுக்காரன்பட்டியை சேர்ந்த நர்சிங் மாணவி அருகிலுள்ள தோட்டத்து கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், போலீஸ் விசாரணை நடக்கிறது.

தர்மபுரி மாவட்டம் மற்றும் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சோகத்தூர் ஆட்டுக்காரன்பட்டி பகுதியை சேர்ந்த பசுவராஜ். என்பவரது மகள் ராஜேஸ்வரி இவர் தர்மபுரியில் உள்ள அரசு செவிலியர் கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் படித்து வந்தார். இந்நிலையில், நேற்று வீட்டின் அருகே தோட்டத்திற்கு சென்றார். நீண்ட நேரமாகியும் ராஜேஸ்வரி திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர், அவரை தேடி தோட்டத்திற்கு சென்றனர். அப்போது அங்குள்ள கிணற்றில், ராஜேஸ்வரி சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இது பற்றி தர்மபுரி நகர காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், சம்பவ இடம் விரைந்து வந்த காவல்துறையினர் ராஜேஸ்வரியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags

Next Story