ஜோலார்பேட்டை அருகே தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

ஜோலார்பேட்டை அருகே தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

கோப்பு படம் 

ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் மேம்பாலம் கீழே உள்ள தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் மேம்பாலம் கீழே உள்ள தண்டவாளத்தில் அடையாளம் தெரியாதா ரயில் மோதியதில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் உள்ளதாக ஜோலார்பேட்டை ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Tags

Next Story