மானாமதுரையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

மானாமதுரையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

சடலமாக மீட்கப்பட்டவர்

மானாமதுரை ரயில்வே சந்திப்பில் அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தினர்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ரயில்வே சந்திப்பு வளாகத்தில் சரக்கு ரயில் செல்லும் தண்டவாள பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரி யாத ஆண் ஒருவர் இறந்து கிடந்துள்ளார்.

சம்பவம் அறிந்து வந்து மானாமதுரை ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து. இறந்தவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story