ஆற்றில் மிதந்து வந்த பெண் சடலம் - காவல்துறையினர் விசாரணை

ஆற்றில் மிதந்து வந்த பெண் சடலம் -  காவல்துறையினர் விசாரணை

காவல் நிலையம் 

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மிதந்து வந்த 60 வயது மதிக்கத்தக்க பெண் சடலத்தை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்துக்கு உட்பட்ட ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலம் மிதந்து கிடப்பதாக ஒகேனக்கல் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது இதனை அடுத்து ஒகேனக்கல் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டனர். மேலும் சடலமாக கிடந்தவர் யார்..? எந்த ஊரைச் சார்ந்தவர்..? என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story