வீரவநல்லூரில் கால்வாயில் மிதந்த பெண் சடலம்

வீரவநல்லூரில் கால்வாயில் மிதந்த பெண் சடலம்

பெண் சடலம் குறித்து விசாரணை

திருநெல்வேலி மாவட்டம்,வெள்ளங்குளி பகுதியில் பெண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நெல்லை மாவட்டம், வீரவநல்லூர் அருகேயுள்ள வெள்ளங்குளி கன்னடியன் கால்வாயில் அக்ரஹாரம் தெரு படித்துறையில் பெண் சடலம் கிடப்பதாக நேற்று (பிப்.24) வீரவநல்லூர் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. தகவலை தொடர்ந்து சம்பவம் இடத்திற்கு சென்ற போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பெண்ணின் பெயர் சுடலி என்பது தெரியவந்துள்ளது.

Tags

Next Story