ஆற்றில் மூழ்கியவர் உடல் மீட்பு

ஆற்றில் மூழ்கியவர் உடல் மீட்பு

ஆற்றில் மூழ்கி பலி

கள்ளக்குறிச்சி மாவட்டம், டி குமாரமங்கலத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி நீரில் மூழ்கி பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவெண்ணெய்நல்லுார் அடுத்த டி.குமாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கஜேந்திரன் மகன் பிரபாகரன், 33; கூலித் தொழிலாளி. இவரது மனைவி தனபாக்கியம். கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி 2 மகள்கள், 5 வயது மகன் உள்ளனர். நேற்று முன்தினம் பேரங்கியூர் தென்பெண்ணை ஆற்றில் நடந்த ஆற்று திருவிழாவிற்கு பிரபாகரன் குடும்பத்துடன் சென்றவர் ஆற்றுநீரில் குளித்தார்.

பின், தனது மனைவி மற்றும் குழந்தைகளை வீட்டிற்கு அனுப்பியவர் தொடர்ந்து ஆற்றில் குளித்தார். இரவு வெகுநேரமாகியும் பிரபாகரன் வீட்டிற்கு வீட்டிற்கு வராததால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் ஆற்றில் தேடினர். அங்கு அவர் குளித்த இடத்தில்சட்டை, லுங்கி கரைமேல் இருந்தது. நீரில் மூழ்கி இருக்காலம் என சந்தேகத்தின் பேரில் திருவெண்ணெய்நல்லுார் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் இரவு முழுவதும் தேடி கிடைக்கவில்லை. இன்று காலை மீண்டும் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பிடாகம் ஆற்றின் கரையோரம் மிதந்த பிரபாகரன் உடலை மீட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story