வெடிகுண்டு மிரட்டல் போலியானது - எஸ்பி விளக்கம்

வெடிகுண்டு மிரட்டல் போலியானது - எஸ்பி விளக்கம்

பைல் படம் 

திருப்பத்தூர் எஸ்பி அலுவலகத்திற்கும், கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வைத்துள்ளதாக வந்த கடிதம் போலியானது என விசாரணையில் தெரியவந்ததாக எஸ்பி ஆல்பர்ட் ஜான் தெரிவித்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தபால் மூலம் கடிதம் ஒன்று வந்துள்ளது. அந்த கடிதத்தில் ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வைத்துள்ளதாக கடிதம் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்த ராஜாவை நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்க்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர் மேலும் அது கடிதத்தை நான் அனுப்பவில்லை மேலும் இது குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்று விசாரணையில் தெரிவித்துள்ளார் இதன் காரணமாக கடிதத்தை அனுப்பிய நபரை போலீசார் தேடி வருகின்றனர் மேலும் போலியாக வதந்தி கிளப்பவே இந்த கடிதம் வந்துள்ளது எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story