கோவை விமான நிலையத்திற்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்

கோவை விமான நிலையத்திற்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்

பயணிகளின் உடமைகள் சோதனை 

கோவை விமான நிலையத்துக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கபட்டதை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணிகள் தீவரப்படுத்தபட்டது.

கோவை விமான நிலையத்தில் இருந்து உள்ளூர் மற்றும் வெளிநாடுகளுக்கு நாள்தோறும் ஏராளமான விமானங்கள் இயக்கப்படுகிறது.விமான சேவையை ஏராளமாநீர் பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில் நேற்று கோவை விமான நிலையத்திற்கும் விமான நிலைய நிர்வாகத்திற்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கபட்டுள்ளது. இதனையடுத்து அங்கு கண்காணிப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தபட்டு தீவிர சோதனைக்கு பின்னர் பயணிகள் அனுமதிக்கபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து விமான நிலைய இயக்குனர் கூறுகையில் இ மெயில் மூலம் மிரட்டல் விடுக்கபட்டதை தொடர்ந்து பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்று கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.மேலும் சென்னை,கோவை மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகள் உள்ள விமான நிலையங்களுக்கு இ மெயில் மூலம் மிரட்டல் விடுக்கபட்டு இருப்பதாக தெரிவித்தார்.

Tags

Next Story