தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

போரூர் அடுத்த கெருகம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில், வெடிகுண்டு வைத்திருப்பதாக இமெயில் வந்ததால், பரபரப்பு ஏற்பட்டுள்ளத். 

போரூர் அடுத்த கெருகம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில், வெடிகுண்டு வைத்திருப்பதாக இமெயில் வந்ததால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
போரூர் அடுத்த கெருகம்பாக்கம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பள்ளி செயல்பட்டு வருகிறது பள்ளியில் வெடிகுண்டு இருப்பதாக பள்ளி அலுவலக இமெயிலுக்கு குறுந்தகவல் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பள்ளி நிர்வாகம் மாங்காடு போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் அலலுவலகத்தில் இருந்து வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் பள்ளி வளாகத்தை சோதனை செய்து வருகின்றனர். இதனால் பள்ளி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது கடந்த மாதம் ஏராளமான பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த சம்பவத்தையடுத்து தற்போது மீண்டும் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story