திருச்சி விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

திருச்சி விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

திருச்சி விமான நிலையம் 

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய இயக்குநரின் தனிப்பட்ட மின்னஞ்சலுக்கு வியாழக்கிழமை அதிகாலை மிரட்டல் தகவல் வந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினா் மற்றும் திருச்சி மாநகர வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா் விமான நிலைய முதலாவது மற்றும் புதிய முனையங்களில் தீவிர சோதனை மேற்கொண்டனா். இதில், வெடிகுண்டுகள் ஏதும் சிக்கவில்லை; அது வெறும் மிரட்டல் எனத் தெரியவந்தது. முதல்கட்ட விசாரணையில், மா்ம நபா்கள் நாடு முழுவதும் உள்ள 14 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பியிருப்பது தெரியவந்துள்ளது. ஜொ்மன் நாட்டில் உள்ள சா்வா் துணையுடன் இதுபோன்ற மின்னஞ்சல்கள் அனுப்பிவருவது தொடா்பாக போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனா். இதேபோல் சென்னை விமான நிலையத்துக்கும் புதன்கிழமை வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் வந்தது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story