அகதிகள் முகாம் மீது குண்டு வீச்சு - சிவகங்கையில் ஆர்ப்பாட்டம்

அகதிகள் முகாம் மீது குண்டு வீச்சு - சிவகங்கையில் ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்

அகதிகள் முகாம் மீது குண்டு வீசப்பட்டதை கண்டித்து சிவகங்கையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
பாலஸ்தீன காஃபாவின் அகதி முகாமின் மீது குண்டு வீசி தாக்கியதில் 45 பேர் மரணம் அடைந்தனர். கடந்த அக்டோபர் 7 லிருந்து 36000 பேருக்கு மேல் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் இச்செயலைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துராமலிங்கபூபதி தலைமையில் சிவகங்கை அரண்மனை வாசல் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கருப்புச்சாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வீரபாண்டி,மோகன்,சேதுராமன், ஆறுமுகம்,ஒன்றிய செயலாளர் உலகநாதன்,மாவட்டக்குழு உறுப்பினர் விஸ்வநாதன், மாவட்டக்குழு உறுப்பினர் சாந்தி, மாவட்டக்குழு உறுப்பினர் அழகர்சாமி, காரைக்குடி தாலுகா செயலாளர் அழகர்சாமி, சிங்கம்புணரி தாலுகா செயலாளர் காந்திமதி, இளையான்குடி தாலுகா செயலாளர் ராஜீ மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story