தேவிகாபுரம் பால்உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு போனஸ்

தேவிகாபுரம் பால்உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு போனஸ்

சங்க உறுப்பினர்களுக்கு போனஸ் வழங்கல்


தேவிகாபுரம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தினர் 48 பேருக்கு 92 ஆயிரம் போனஸ் மாவட்ட செயலாளர் தரணி வேந்தன் வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டம் தேவிகாபுரம் பால் கூட்டுறவு சங்கத்தில் 48 பேருக்கு போனஸ் ரூபாய் 92 ஆயிரம் திமுக வடக்கு மாவட்ட செயலாளர் எம் எஸ் தரணிவேந்தன் வழங்கினார். தேவிகாபுரம் ஊராட்சியில் பால் கூட்டுறவு சங்கம் இயங்கி வருகிறது 21- 22ம் ஆண்டு சங்கத்தில் பால் ஊற்றிய 48 பேருக்கு லாபத் தொகை ரூபாய் 92,299 ரூபாயை பால் உற்பத்தியாளர்களுக்கு போனஸ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்குஊராட்சி மன்ற தலைவர் வி. எம். டி .வெங்கடேசன் தலைமை தாங்கினார்.

பால் கூட்டுறவு சங்க செயலாட்சியர் கலைச்செல்வி பொது மேலாளர் அமரவன் மேலாளர்கள் காளியப்பன், நரசிம்மன், ஆகியோர் முன்னிலை வகித்தனர் அனைவரையும் கூட்டுறவு வங்கி செயலர் மோகன்ராஜ் வரவேற்றார். நிகழ்ச்சியில் துணைப்பதிவாளர் பால்வளம் கோபி திமுக மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தரணி சர்க்கரை ஆலை இயக்குனர் எம் எஸ் தரணிவேந்தன் கலந்து கொண்டு 48 பேருக்கு ரூபாய் 92 ஆயிரம் போனஸ் வழங்கி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் மாவட்டத் துணைச் செயலாளர் ஜெயராணி ரவி, ஒன்றிய செயலாளர் துரைமாமது ,முள்ளிப்பட்டு ரவி ,அரையாளம் பழனி,ஓய்வு பெற்ற ஆய்வாளர் முருகன்,

ரவிக்குமார் ,முருகன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மல்லிகா திருநாவுக்கரசு, மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பட விளக்கம் தேவிகாபுரம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் 48 உறுப்பினர்களுக்கு போனஸ் தொகையை திமுக மாவட்ட செயலாளர் எம். எஸ். தரணிவேந்தன் வழங்கினா.ர் உடன் ஊராட்சி மன்ற தலைவர் வி. எம். டி. வெங்கடேசன் செயலாட்சியர்கலைச்செல்வி உட்பட பலர்.

Tags

Next Story