பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் நூல் நன்கொடை வழங்கும் விழா

பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் நூல் நன்கொடை வழங்கும் விழா

புத்தக நன்கொடை வழங்கும் விழா 

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினத்தை முன்னிட்டு புத்தக நன்கொடை வழங்கும் விழா .
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் அர்ஜுன் சிங் நூலகமும், கல்வியியல் துறையும் இணைந்து உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினத்தை முன்னிட்டு புத்தக நன்கொடை வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் வெ.இராமச்சந்திரன் புத்தகம் நன்கொடை வழங்கும் விழாவினை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் முதன்மையர், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், கூட்டுப் பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர். மேலும், இந்நிகழ்வில் நூல் வாசிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. பல்வேறு துறை சார்ந்த பேராசிரியர்களும், மாணவர்களும் புத்தகங்களை நன்கொடைகளாக வழங்கினார்கள். புத்தகம் நன்கொடை வழங்கும் நிகழ்வானது வெள்ளிக்கிழமை தொடங்கி ஏப்.24 வரை தொடர்ந்து நடைபெறும். நன்கொடையாகப் பெறப்படும் புத்தகங்களை அரசுப் பள்ளி நூலகங்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மாணவர்கள் புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஊக்கப்படுத்தவும், புத்தக வாசிப்பின் அவசியத்தை உணர்த்தும் வகையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

Tags

Next Story