வீ.கே.எம். வித்யாலயா பள்ளியில் புத்தக கண்காட்சி

வீ.கே.எம். வித்யாலயா பள்ளியில் புத்தக கண்காட்சி

புத்தக காட்சி 

ஓமந்தூர் வீ.கே.எம் வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் புத்தக கண்காட்சியில் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ஓமந்தூர் வீ.கே.எம் வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் தொடர்ந்து 2 நாட்கள் புத்தக கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சியை பள்ளி முதல்வர் ஆரோக்கியராஜ் வழிகாட்டுத லின்படி துணை முதல்வர் ஹேமவரதலு தொடங்கி வைத்தார். விழுப்புரம் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் லிமிடெட் மற்றும் வீ.கே.எம் வித்யாலயா பள்ளி ஆகியவை இணைந்து இக்கண்காட்சியை நடத் தின. மாணவர்களிடையே புத்தகம் வாசிப்புத்திறனை மேம்படுத்தவும், கற்றல் திறனை அதிகப்படுத்தவும் இக்கண்காட்சி அமைக்கப் பட்டது. இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story