நாமக்கல்லில் புத்தக கண்காட்சி தொடங்கியது.

நாமக்கல்லில் புத்தக கண்காட்சி தொடங்கிய முதல் நாளிலேயே ஆர்வமுடன் புத்தகங்களை பொதுமக்கள் வாங்கினர்

நாமக்கல்லில் புத்தக கண்காட்சி துவங்கியது.... நாமக்கல்லில் புத்தக கண்காட்சி தொடங்கிய முதல் நாளிலேயே ஆர்வமுடன் புத்தகங்களை பொதுமக்கள் வாங்கினர்! நாமக்கல்லில் துவங்கியுள்ள புத்தக கண்காட்சியில், அறிவுப்பசிக்கு விருந்தளிக்கும் அனைத்து புத்தகங்களும் ஓரிடத்தில் சங்கமித்துள்ளன இது வாசிப்பை நேசிக்கும் அனைவருக்கும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

நாமக்கல் மோகனூர் சாலையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி (தெற்கு) மைதானத்தில் புத்தக கண்காட்சியை நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான K.R.N.ராஜேஷ்குமார் MP துவக்கி வைத்தார்.அருகில் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் இராமலிங்கம் MLA, மாவட்ட ஆட்சியர் உமா,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் சுமன், மற்றும் அனைத்து அரசு துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

நாமக்கல் புத்தக கண்காட்சி, வரும் பிப்ரவரி 2ம் தேதி வரை நடைபெறுகிறது. தினமும் காலை, 11:00 முதல் இரவு, 9:30 மணி வரை கண்காட்சியை பார்வையிடலாம்.

Tags

Next Story