புத்தகத் திருவிழா விழிப்புணர்வு பேரணி

சங்கரன்கோவிலில் இன்று நடந்த புத்தகத் திருவிழா விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் துவக்கி வைத்தார்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் கோமதி அம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் வருகிற 24.12.2023 முதல் 02.01.2024 வரை பொதிகை புத்தக கண்காட்சி நடைபெறவுள்ளது. இதையடுத்து இன்று மாலையில் தென்காசி மாவட்ட கலெக்டர் துரை இரவிச்சந்திரன் அதற்க்கான ஏற்பாட்டு பணிகளை ஆய்வு செய்து பொதிகை புத்தகத் திருவிழா விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் உட்பட ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story