மயிலம் பொம்மபுர ஆதீனம் மடத்தில் நூல் வெளியீட்டு விழா

மயிலம் பொம்மபுர ஆதீனம் மடத்தில் நூல் வெளியீட்டு விழா

நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டவர்கள் 

மயிலம் பொம்மபுர ஆதீனம் மடத்தில் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம் மயிலம் பொம்மபுர ஆதீனம் மடத்தில் மயிலம் ஸ்ரீ சுப்பிரமணியர் சதகம் என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு மயிலம் பொம்புர ஆதீனம் 20-ம் பட்டம் சிவஞானபாலய சுவாமிகள் தலைமை தாங்கி, நூலை வெளியிட்டு ஆசியுரை வழங்கினார்.

மயிலம் ஸ்ரீ மத் சிவஞானபாலய சுவாமிகள் தமிழ் கலை, அறிவி யல் கல்லூரி செயலாளர் ராஜூகுமார் ராஜேந்திரன், வக்கீல் முனு சாமி, இந்து அறநிலையத் துறை ஆணையர் சிவக்குமார், விழுப்பு ரம் மண்டல முன்னாள் தணிக்கை அலுவலர் குணசேகரன், மயி லம் சிவப்பிரகாச சுவாமிகள் மேல்நிலைப்பள்ளி செயலாளர் விசுவ நாதன், மயிலம் ஸ்ரீமத் சிவஞானபாலய சுவாமிகள் தமிழ் கலைக் கல்லூரி முதல்வர் திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக புதுவை பேராசிரியர் சச்சிதானந்தம் வரவேற்றார். புலவர் முருகசாமி நூல் ஆய்வு செய்தார். இந்த விழாவில் வக்கீல் தீனதயாளன், பேராசிரியர் சரோசா பாபு, கலை மாமணி வேணு கோபால், ஆசிரியர் மோகன்தாசு, கலைமாமணி கோவிந்தராசு, புலவர் சண்முகசுந்தரம், பாலசுப்பிரமணியன், பேராசிரியர்கள் விசா லாட்சி, பூங்குழலி, பெருமாள், புலவர் அணிவண்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.விழா முடிவில் கவிஞர் ஆதவன் நன்றி தெரிவித்தார்.

இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சுந்தர பாண்டியன் செய்திருந்தார்.

Tags

Next Story