புதிய திட்ட பணிகளுக்கு பூமி பூஜை

புதிய திட்ட பணிகளுக்கு பூமி பூஜை

பூமி பூஜை 

சங்ககிரி பேரூராட்சி பகுதிகளில் 2 கோடியே 67 லட்சம் மதிப்பீட்டில் புதிய திட்ட பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது.

சேலம் மாவட்டம், சங்ககிரி பேரூராட்சிக்குட்பட்ட வார்டுகளில் 2.67 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய தார்சாலை அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல்நாட்டு விழா நடைபெற்றது. நகர்ப்புற சாலை மேம்பாட்டுத்திட்டம் 2023}2024 ன் கீழ் பூல்வாய்தோட்டம், வி.என்.பாளையம், அக்கமாபேட்டை, மூலக்காட்டானூர், சாய்கார்டன், சத்யா நகர், நாயக்கர் தோட்டம் ஆகிய பகுதிகளில் 2.67 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய தார் சாலைகள், தடுப்புச்சுவர் அமைத்தல் உள்ளிட்ட புதிய திட்ட பணிகளுக்கு சங்ககிரி பேரூராட்சித்தலைவி மணிமொழிமுருகன் அடிக்கல்நாட்டி துவக்கி வைத்தார்.

அப்போது பேரூராட்சி செயல் அலுவலர் உஷா, சங்ககிரி ஊராட்சி ஒன்றிக்குழு உறுப்பினர் தங்கமுத்து, பேரூராட்சி துணைத்தலைவர் அருண்பிரபு, திமுக நகர செயலாளர் முருகன் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story