பொதுகழிப்பிடம் கட்ட பூமி பூஜை

பொதுகழிப்பிடம் கட்ட பூமி பூஜை

பூமி பூஜை

சேலம் மாவட்டம், அழகுசமுத்திரம் ஊராட்சியில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பொதுகழிப்பிடம் கட்ட சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து எம்எல்ஏ அருள் நிதி ஓதுக்கீடு செய்தார்.

சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அழகுசமுத்திரம் ஊராட்சியில் போதுமான கழிப்பிட வசதி இல்லாமல் குழந்தைகள், பெண்கள் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து அந்த பகுதி மக்கள் பொதுக்கழிப்பிடம் கட்டித்தர வேண்டும் என்று அருள் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் மாரியம்மன் கோவில் அருகே பொதுக்கழிப்பிடம் கட்டுவதற்காக ரூ.21 லட்சம் மதிப்பில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்தார். தொடர்ந்து பொதுக்கழிப்பிடம் கட்டிடம் கட்ட பூமி பூஜை நடந்தது. இதில் அருள் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமிபூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் தாரமங்கலம் ஒன்றியக்குழு தலைவர் சுமதி பாபு, பா.ம.க. மாநில செயற்குழு உறுப்பினர் கே.சி.ஆறுமுகம், மாவட்ட அமைப்பு தலைவர் சரவணகந்தன். ஒன்றிய செயலாளரும், கருக்கல்வாடி ஊராட்சி மன்ற தலைவருமான கே.சி.கணேசன், அழகுசமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் அறிவழகி மணி, ஒன்றிய கவுன்சிலர் சின்னதம்பி, ஒன்றிய தலைவர் அருள்மணி, மாவட்ட தேர்தல் பணிக்குழு தலைவர் இல.சுரேஷ் மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story