வடலூர்: பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம்

வடலூர்: பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம்

பூத் கமிட்டி கூட்டம்

கடலூர் மாவட்டம்,குறிஞ்சிபாரியில் நடைபெற்ற திமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தில் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வடலூர் நகரத்திற்கு உட்பட்ட 33 பூத் நிர்வாகிகள் ஆலோசனை சிறப்பு கூட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற அலுவலகத்தில் திமுக ஒன்றிய செயலாளர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் பெருநெற்கிள்ளி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். உடன் குறிஞ்சிப்பாடி வடக்கு ஒன்றிய செயலாளர் ஆர்.நாராயணசாமி, வடலூர் நகர மன்ற தலைவர் சிவக்குமார், வடலூர் நகர செயலாளர் தமிழ்ச்செல்வன், ஒன்றிய அவைத் தலைவர், ஒன்றிய பொருளாளர் மற்றும் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story