அதிமுக ஆட்சியில் செய்த நன்மைகளைப் பற்றி கூறி பூத் கமிட்டி படிவம்

அதிமுக ஆட்சியில் செய்த நன்மைகளைப் பற்றி கூறி பூத் கமிட்டி படிவம்

பூத் கமிட்டி படிவம் வழங்கிய எம்.எல்.ஏ 

கலசபாக்கம் கிழக்கு ஒன்றியத்தில் உள்ள 10 ஊராட்சிகளில் பூத் கமிட்டி படிவத்தை வழங்கி அதிமுக ஆட்சியில் செய்த நன்மைகள் பற்றி மக்களுக்கு எடுத்து கூறி பூத் கமிட்டி படிவத்தை திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, எம்எல்ஏ வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் கிழக்கு ஒன்றியத்தில் உள்ள 10 ஊராட்சிகளில் நேற்று கமிட்டி படிவத்தை வழங்கி அதிமுக ஆட்சியில் செய்த நன்மைகள் பற்றி மக்களுக்கு தெளிவான முறையில் எடுத்துக் கூறி பூத் கமிட்டி படிவத்தை திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, எம்எல்ஏ வழங்கினர். அப்போது பேசியதாவது கலசபாக்கம் கிழக்கு ஒன்றியத்தில் உள்ள கலசபாக்கம், காப்பலூர், பூண் டி, மோட்டூர், வன்னியனூர், எலத்தூர், மேட்டுப்பாளையம், மற்றும் பல ஊராட்சிகளில் பூத் கமிட்டி படிவத்தை வழங்கிபூத் கமிட்டி படிவத்தை சரியான முறையில் பூர்த்தி செய்து வரும் ஐந்தாம் தேதிக்குள் அனைத்து பூர்த்தி செய்த படிவத்தையும் முன்னாள் தமிழக முதல்வர் அதிமுக கழக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களிடம் நாம் ஒப்படைக்க வேண்டும் அவரிடம் திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் கழகப் பணியை சிறப்பான முறையில் செயல்படுகிறது என்ற நல்ல பாராட்டையும் பெற வேண்டும் அதற்காக கழக பணியை நாம் அனைவரும் அயர்ராமல் செய்வோம் என்றார் அப்போது கழக நிர்வாகிகளுக்கும் பொதுமக்களுக்கும் அதிமுக செய்த நலத்திட்ட உதவிகளை பற்றி எடுத்துக் கூறினார் அப்போது கடந்த அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு திருமணம் உதவி ரூ 50,000 தாலிக்கு தங்கமும் வழங்கியது அதிமுக ஆட்சி தான் பொதுமக்கள் மருத்துவம் பார்ப்பதற்கு அங்கும் இங்கும் அலையக்கூடாது என்பதற்காக முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, அவர்கள் தமிழகத்தில் 2000 மினி கிளினிக்கை தொடங்கி வைத்தார் அதன் மூலம் அப்பகுதி மக்கள் அருகில் உள்ள மக்கள் அனைவரும் சிகிச்சை பெற்று பயனடைந்தனர் அதேபோல் சத்துணவு திட்டத்தையும் கொண்டு வந்தது மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் அவர்கள் தான் இந்த திட்டமும் அதிமுக ஆட்சி தான் துவங்கப்பட்டது குடும்ப அட்டைக்கு இலவச அரிசி வழங்கியது அதிமுக ஆட்சி தான் விவசாய கடன் அதிகளவு தள்ளுபடி செய்ததும் அதிமுக ஆட்சி தான் அதேபோல் மாணவர்கள் நல்ல முறையில் படிப்பதற்காக 14 வகையான நலத்திட்ட உதவிகளை வழங்கியதும் அதிமுக ஆட்சி தான் கர்ப்பிணி தாய்மார்களுக்கு கர்ப்ப காலத்தில் ரூ 10000 நிதி உதவியை ரூ 18,000 ஆக உயர்த்தி கொடுத்ததும் அதிமுக ஆட்சி தான் இதுபோல தமிழகத்தில் பல நல்ல திட்டங்களை வழங்கியது அதிமுக ஆட்சியில் தான் அதிகமான திட்டங்கள் வழங்கப்பட்டது என்று திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, எம்எல்ஏ இவ்வாறு பூத் கமிட்டி படிவத்தை வழங்கிய போது கழக நிர்வாகிகளுக்கும் பொதுமக்களுக்கும் கூறினார். நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் கி.அரவிந்தன், ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தன், கிருஷ்ணமூர்த்தி, அன்பு, வன்னியனூர் முன்னாள் ஊராட்சி செயலாளர் வேலு, அய்யம்பாளையம் கிளைச் செயலாளர் முருகன், முன்னாள் கிளைச்செயலாளர் மாணிக்கம், சீராம்பாளையம் கிளைச் செயலாளர் முருகன், பஞ்சாயத்து தலைவர்கள் முருகன், பவுனு வெள்ளிகண்ணு, மற்றும் பஞ்சாயத்து தலைவர்கள் ஒன்றிய கவுன்சிலர்கள் அதிமுக ஒன்றிய கழக நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.

Tags

Next Story