அதிமுக ராசிபுரம் நகரக் கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கூட்டம்

அதிமுக ராசிபுரம் நகரக் கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கூட்டம்

அதிமுக ராசிபுரம் நகரக் கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கூட்டம்


அதிமுக ராசிபுரம் நகரக் கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் முன்னாள் முதல்வர், கழக பொதுச்செயலாளர், எதிர்க்கட்சி சட்டமன்ற தலைவர் எடப்பாடி கே பழனிசாமி ஆணைக்கிணங்க முன்னாள் அமைச்சர், கழக அமைப்புச் செயலாளர் மாவட்ட கழக செயலாளருமான பி.தங்கமணி, ஆலோசனை படியும் ராசிபுரம் நகர கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி ஆய்வு கூட்டம் ராசிபுரம் ஆத்தூர் சாலை பகுதியில் உள்ள குமரவேல் தனியார் திருமண மண்டபத்தில் நகர கழக செயலாளர் எம். பாலசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது.

இதில் ராசிபுரம் நகரத்தில் உள்ள பல்வேறு வார்டுகள் சேர்ந்த பூத் கமிட்டி நிர்வாகிகள் பூத் கமிட்டி உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும் பூத் கமிட்டி நிர்வாகிகள் உறுப்பினர்கள் படிவம் சரிபார்க்கப்பட்டு அனைவரும் முறையாக செயல்படுகிறார்களா என பூத் கமிட்டி ஆய்வுக் கூட்டத்தில் சரிபார்க்கப்பட்டது.

இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர் மாவட்ட கழக செயலாளர் பி. தங்கமணி, முன்னாள் அமைச்சர் மாநில மகளிர் அணி இணைச் செயலாளர் வெ.சரோஜா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து பூத் கமிட்டி ஆய்வுக் கூட்டத்தில் சிறப்புரையாற்றி நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கினர். இந்த நிகழ்வில் ஒன்றிய கழகச் செயலாளர்கள் இ.கே. பொன்னுசாமி, தாமோதரன், மோகனூர் சர்க்கரை ஆலை தலைவர் வழக்கறிஞர் கே.பி.எஸ். சுரேஷ் குமார், மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள், பேரூர் கழக நிர்வாகிகள், மகளிர் அணியினர், தகவல் தொழில்நுட்ப பிரிவு அணியினர், முன்னாள் கவுன்சிலர்கள், தொண்டர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story