அருப்புக்கோட்டையில் பூத் கமிட்டி ஆய்வு கூட்டம்

அருப்புக்கோட்டையில் பூத் கமிட்டி ஆய்வு கூட்டம் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது..

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் 2024 பாராளுமன்ற தேர்தலுக்கான பூத் கமிட்டி மகளிர் குழு இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை குழு அமைத்தல் தொடர்பான நிர்வாகிகள் ஆய்வு கூட்டம் முன்னாள் அமைச்சர் பூத் கமிட்டி பொறுப்பாளர் பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது..

தமிழகம் முழுவதும் எதிர்வரும் 2024 பாராளுமன்ற தேர்தலுக்கான பூத் கமிட்டி மகளிர் குழு இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை குழுக்கள் அமைத்தல் தொடர்பாக கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் மாவட்டம் வாரியாக பொறுப்பாளர்களை நியமித்தார்.

இதன் ஒரு பகுதியாக விருதுநகர் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அருப்புக்கோட்டையில் எதிர்வரும் 2024 பாராளுமன்ற தேர்தலுக்கான பூத் கமிட்டி மகளிர் குழு இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை குழுக்கள் அமைத்தல் தொடர்பான ஆய்வுக் கூட்டம் பூத் கமிட்டி பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் தலைமையிலும் விருதுநகர் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் ஆர் கே ரவிச்சந்திரன் முன்னிலையிலும் நடைபெற்றது.. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் கழக அமைப்புச் செயலாளர் பாஸ்கரன் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து பாடுபட வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை கழக நிர்வாகிகள் விரைந்து முடிக்க வேண்டும் என அதிமுகவினருக்கு வேண்டுகோளும் விடுத்தார்கள். இந்நிகழ்ச்சியில் விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்கே ரவிச்சந்திரன், மற்றும் விருதுநகர் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட நகரச் செயலாளர்கள் ஒன்றிய செயலாளர்கள் என ஏராளமான கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்..

Tags

Next Story