அபாய நிலையில் ஆழ்துளை கிணறு

அபாய நிலையில் ஆழ்துளை கிணறு

ஆழ்துளை கிணறு

திருத்தணியில் அபாய நிலையில் ஆழ்துளை கிணறு.
திருத்தணி ஆர்.கே.பேட்டை ஒன்றியம், ராஜாநகரம் கிராமத்தில் இருந்து செதுலுார் செல்லும் சாலையில், கிராம பொதுகுளம் அமைந்துள்ளது. இந்த குளத்தின் தெற்கில், ஏரியும் உள்ளது. ஏரிக்கு அருகே உள்ளதால், குளத்திற்கு நீர்வரத்து சிறப்பாக உள்ளது. இந்நிலையில், ராஜாநகரம் கிராமத்திற்கு குடிநீர் வினியோகம் செய்வதற்காக, இந்த குளக்கரையில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆழ்துளை கிணறு பயன்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. பயன்படுத்தப்படாமல் உள்ள இந்த ஆழ்துளை கிணறு, முறையாக மூடி போட்டு பாதுகாக்கப்படாமல், கல் வைத்து மூடப்பட்டுள்ளது. இந்த வழியாக, செதுலுார் மற்றும் ஆந்திர மாநிலம், பாலசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏராளமானோர் பயணித்து வருகின்றனர். பாதுகாப்பு இன்றி கிடக்கும் ஆழ்துளை கிணறு உள்ள பகுதியை கடந்து செல்லும் சிறுவர்கள், அச்சத்தில் தவித்து வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஆழ்துளை கிணறை பாதுகாப்பாக மூடி வைக்க வேண்டும் என பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.

Tags

Next Story