பெட்ரோல் பங்க்குகளில் பாட்டிலில் பெட்ரோல் தர கூடாது

பெட்ரோல் பங்க்குகளில் பாட்டிலில் பெட்ரோல் தர கூடாது

குமாரபாளையத்தில் நடந்த பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் கூட்டத்தில், பாட்டிலில் பெட்ரோல் தர கூடாது என போலீசார் அறிவுறுத்தினர்.


குமாரபாளையத்தில் நடந்த பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் கூட்டத்தில், பாட்டிலில் பெட்ரோல் தர கூடாது என போலீசார் அறிவுறுத்தினர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நடந்த பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் கூட்டத்தில், பாட்டிலில் பெட்ரோல் தர கூடாது என போலீசார் அறிவுறுத்தினர். ஏப்.19ல் லோக்சபா தேர்தல் நடப்பதையொட்டி பல்வேறு அரசியல் கட்சியினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். தேர்தல் பிரச்சார சமயங்களில் அசம்பாவிதம் ஏற்படுவதை தடுக்க குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. பொதுமக்கள் பெட்ரோல் பங்க்கிற்கு கேன் மற்றும் பாட்டில் கொண்டு வந்து பெட்ரோல் கேட்டால் கொடுக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது. போலீசாரின் இந்த தகவலை ஏற்று, இனி யாருக்கும் பாட்டிலில் பெட்ரோல் கொடுக்க மாட்டோம் என பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் உறுதி கூறினர். எஸ்.ஐ.க்கள் தங்கவடிவேல், கெங்காதரன், எஸ்.எஸ்.ஐ.க்கள் குணசேகரன், முருகேசன், மாதேஸ்வரன், ஏட்டுக்கள் ராம்குமார், பார்த்திபன் உள்பட போலீசார் பலரும் உடனிருந்தனர்.

Tags

Next Story