திருச்சியில் பெட்டி, பெட்டியாக புகையிலை பொருட்கள் பறிமுதல்

திருச்சியில் பெட்டி, பெட்டியாக புகையிலை பொருட்கள் பறிமுதல்

பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்கள்

திருச்சி கே.கே.நகர் தென்றல் நகரில் உள்ள ஒரு டீக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சி கே.கே.நகர் தென்றல் நகரில் உள்ள ஒரு டீக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து திருச்சி மாநகராட்சி உணவு பாதுகாப்பு அதிகாரி சையது இப்ராகிம் தலைமையிலான அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட டீக்கடைக்கு சென்று சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் பெட்டி,பெட்டியாக இருப்பது கண்டறியப்பட்டது.அதனை பறிமுதல் செய்த அதிகாரி சையது இப்ராகிம், இதுகுறித்து கே.கே.நகர் போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து டீக்கடை வியாபாரி கார்த்திக்கை கைது செய்தனர்.இதேபோல, ஸ்ரீரங்கம், காந்தி மார்க்கெட் பகுதிகளில் கஞ்சா விற்றதாக வெங்கடேஷ், முகமது அப்பாஸ் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். லாட்டரி சீட்டுகள் விற்றதாக அசோக் என்பவர் கைது செய்யப்பட்டார்.

Tags

Next Story