குத்துச்சண்டை போட்டி மாணவர்கள் சாதனை

குத்துச்சண்டை போட்டி மாணவர்கள் சாதனை


திருவண்ணாமலையில் நடந்த குத்துச்சண்டை போட்டியில் சங்கராபுரம் மாணவர்கள் தங்கம், வெள்ளி வென்று சாதனை படைத்தனர்.


திருவண்ணாமலையில் நடந்த குத்துச்சண்டை போட்டியில் சங்கராபுரம் மாணவர்கள் தங்கம், வெள்ளி வென்று சாதனை படைத்தனர்.

திருவண்ணாமலையில் நடந்த குத்துச்சண்டை போட்டியில் சங்கராபுரம் மாணவர்கள் தங்கம், வெள்ளி வென்று சாதனை படைத்தனர். திருவண்ணாமலையில் குத்துச் சண்டை போட்டி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடந்தது. இப்போட்டியில் 35க்கும் மேற்பட்ட மாவட்டங்க ளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

போட்டியில் சங்கராபுரம் சூர்யா ஸ்போர்ட்ஸ் கிளப்பை சேர்ந்த 8 பேர் வெவ்வேறு பிரிவுகளில் பயிற்சியாளர் சூரியமுர்த்தி தலைமையில் பங்கேற்றனர். இதில் மாணவர்கள் சாய் சரண், கருணா, மாணவி வைஷ்ணவி, நிஷாலினி ஆகியோர் தங்கமும், பிரத்திமனா வெள்ளியும், மோகித், கோகுல், பூமிகா ஆகியோர் வெண்கலமும் வென்றனர். பதக்கம் வென்று கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த மாணவ, மாணவிகளை தமிழ்நாடு குத்துச்சண்டை சங்க செயலாளர் நாகராஜன், சர்வதேச குத்துச் சண்டை வீரர் லட்சுமிகாந்தன் ஆகியோர் பாராட்டினர்.

Tags

Next Story