ஆம்புலன்சில் பிறந்த ஆண் குழந்தை

ஆம்புலன்சில் பிறந்த ஆண் குழந்தை

ஆம்புலன்சில் ஆண் குழந்தை பிறந்தது 

வேலூர் மாவட்டம், குருமாவை கிராமத்தை சேர்ந்த கர்ப்பிணி பெண் பிரசவத்திற்காக ஆம்புலன்சில் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே ஆண் குழந்தை பிறந்தது.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுக்கா குருமலை கிராமத்தைச் சேர்ந்த சாந்தி நிறைமாத கர்ப்பிணி . பிரசவ வலிக்காக அணைக்கட்டு ஊசுர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக செல்ல 108 ஆம்புலன்சை அழைத்தனர். உடனடியாக மருத்துவ உதவியாளர் தென்றல் மற்றும் ஓட்டுநர் வினோத் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

அங்கு பிரசவ வலியில் இருந்த சாந்திவை பரிசோதித்து 108 ஆம்புலன்ஸில் ஏற்றிக்கொண்டு ஊசுர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லும் போது சிறிது தூரத்தில் சித்ராவிற்கு வலி அதிகரித்தது. உடனடியாக மருத்துவ உதவியாளர் தென்றல் ஆம்புலன்சை ஓரமாக நிறுத்த ஓட்டுநர் வினோத் அறிவுறுத்தினார்.

பின்னர் மருத்துவ உதவியாளர் தென்றல் பிரசவம் பார்த்தார். அதில் சித்ராவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பின்பு தாயும் சேயும் பத்திரமாக ஊசுர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது தாயும் குழந்தையும் நலமாக உள்ளனர்.

Tags

Next Story