திண்டிவனம் அருகே மின்சாரம் தாக்கி சிறுவன் சாவு

திண்டிவனம் அருகே மின்சாரம் தாக்கி சிறுவன் சாவு

இறந்த சிறுவன்

திண்டிவனம் அருகே மின்சாரம் தாக்கி சிறுவன் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள கீழ்ஆதனூர் கிராமத்தை சேர்ந் தவர் வினோத்குமார். பெயிண் டர். இவரது மனைவி சுந்தரி. இந்த தம்பதிக்கு மோஷித்(வயது 4), புவன்(3) ஆகிய 2 குழந்தைகள் இருந்தனர்.

இதில் மோஷித், அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தான். இந்த நிலையில் நொளம்பூரில் உள்ள வினோத் குமாரின் உறவினர் வீட்டில் நேற்று இரவு மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. இதில் பங்கேற்பதற்காக வினோத்குமார் தனது குடும்பத்துடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

அங்கு சிறுவன் விளையா டிக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மின் சாரம் தாக்கியதில் மோஷித் சுருண்டு விழுந்தான். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வினோத்குமார் மற்றும் உறவினர்கள் சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவனை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே சிறு வன் மோஷித் இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்த புகாரின் பேரில் ஒலக்கூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story