எலக்ட்ரிக் இருசக்கர வாகனம் மோதி சிறுவன் படுகாயம்

எலக்ட்ரிக் இருசக்கர வாகனம் மோதி சிறுவன் படுகாயம்

பைல் படம்

அரியலூர் மாவட்டம் வாணதிரையான்பட்டிணம் கிராமத்தில் எலக்ட்ரிக் இருசக்கர வாகனம் மோதி சிறுவன் படுகாயம். போலீசார் விசாரணை செய்கின்றனர்
அரியலூர் மாவட்டம் வாணதிரையான்பட்டிணம் கிராமத்தை சேர்ந்த ராஜா என்பவரின் மகன் முகுந்தன். இவர் ஜெயங்கொண்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் தனது கிராமத்தில் உள்ள சாலையை முகுந்தன் கடக்கமுயன்றபோது அந்த வழியே சோழமாதேவி கிராமத்தை சேர்ந்த ஆர்த்தி என்பவர் ஓட்டிவந்த எலக்ட்ரிக் இருசக்கர வாகனம் மோதி சிறுவன் படுகாயம் அடைந்தார். இதனையடுத்து அங்கிருந்தவர்கள் சிறுவனை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக காவல்துறை தரப்பில் தகவல் தரப்பட்டுள்ளது.

Tags

Next Story