சேலத்தில் கன்டெய்னர் லாரி கவிழ்ந்து பலியான சிறுவன் அடையாளம் தெரிந்தது

சேலத்தில் கன்டெய்னர் லாரி கவிழ்ந்து பலியான சிறுவன் அடையாளம் தெரிந்தது

விபத்தில் சிக்கிய லாரி

சேலத்தில் கன்டெய்னர் லாரி கவிழ்ந்து பலியான சிறுவன் அடையாளம் தெரிந்தது.

சேலம் ஜாகீர் அம்மாபாளையம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் விஷ்ணு ஜவகர் (வயது 17). இவர் நேற்று முன்தினம் இரவு பாரதி நகரைச் சேர்ந்த விஷால்குமார் (18) மற்றும் இன்னொரு 16 வயது நண்பருடன் ஒன்றாக மோட்டார் சைக்கிளில் மாமாங்கம் அருகே வந்தபோது சாலையை கடக்க முயன்றனர்.

அப்போது ஓமலூரில் இருந்து சேலம் நோக்கி வந்த கன்டெய்னர் லாரியின் குறுக்கே மோட்டார் சைக்கிள் சென்றதாக தெரிகிறது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கன்டெய்னர் லாரி சாலையில் கவிழ்ந்தது. அதற்குள் சிக்கி 16 வயது சிறுவன் பலியானான். மேலும் ஜவகர், விஷால்குமார் இருவரும் காயம் அடைந்தனர். காயம் அடைந்த 2 பேருக்கும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே இறந்த சிறுவனை அடையாளம் காண போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பலியான சிறுவன் விக்னேஷ் என்பதும், ஜாகீர் அம்மபாளையத்தை சேர்ந்த குமார் என்பவருடைய மகன் என்பதும் தெரிய வந்தது. அந்த சிறுவன் அங்குள்ள டூவிலர் ஒர்க்‌ஷாப்பில் தொழிலாளியாக வேலை செய்து வந்ததும் தெரிய வந்துள்ளது.

Tags

Next Story