எலிமருந்து கலந்த தண்ணீர் குடித்த சிறுவன் உயரிழப்பு!

எலிமருந்து கலந்த தண்ணீர் குடித்த சிறுவன் உயரிழப்பு!

சிறுவன் உயரிழப்பு!

சாத்தான்குளம் அருகே எலிமருந்து கலந்த தண்ணீரை தவறுதலாக குடித்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். 
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே வடக்கு ராமசாமி புரத்தை சேர்ந்தவர் ராஜன். இவரது மகன் விக்னேஷ் என்ற விக்னேஷ்வரன்(13), அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். இவரது வீட்டில் எலி தொல்லை இருந்து வந்ததால் எலி மருந்து பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 18ம்தேதி வீட்டின் அலமாரியில் வைத்திருந்த எலி மருந்து, கீழே விழுந்ததில் அருகில் வைத்திருந்த செம்பு தண்ணீரில் விழுந்துள்ளது. இதனை கவனிக்காத சிறுவன், எலிமருந்து கலந்திருந்த தண்ணீரை எடுத்து குடித்ததாக கூறப்படுகிறது. இதனால் சிறுவன் சிறிது நேரத்தில் மயக்கம் அடைந்துள்ளார். இதனையடுத்து அவரதுபெற்றோர், சிறுவனை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக திசையன்விளையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் விக்னேஷ்வரன் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் தட்டார்மடம் காவல் உதவி ஆய்வாளர் குரூஸ் மைக்கேல் வழக்குப்பதிவு செய்தார். காவல் ஆய்வாளர் திருநாவுக்கரசு விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story