பள்ளி மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்த வாலிபர்-போக்சோவில் கைது!

பள்ளி மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்த வாலிபர்-போக்சோவில் கைது!

கைது

மதுரை திருமங்கலம் அருகே தொடர்ச்சியாக பள்ளி மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்த வாலிபர்.போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

மதுரை திருமங்கலம் அருகே தொடர்ச்சியாக பள்ளி மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்த வாலிபர்.பள்ளி மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் வாலிபர் போக்சோவில் கைது

மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட கரிசல்பட்டி பகுதியைச் சேர்ந்த வீரபாண்டி என்பவரது மகன் அழகுபாண்டி (19)., இவர் ITI படிப்பை பாதியிலே நிறுத்திவிட்டு பெட்ரோல் பங்கில் பம்ப் ஆபரேட்டராக வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் அழகு பண்டியின் சகோதரி திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் நிலையில் தனது சகோதரியின் தோழி ஒருவருக்கு செல்போன் மூலம் தொடர்ச்சியாக பேசி காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளதாக கூறப்படுகிறது இந்த நிலையில் இச்சம்பவம் குறித்து இரு விட்டாரின் பெற்றோருக்கும் தெரிந்து கண்டித்துள்ளனர்.

தொடர்ந்து தனது சகோதரியின் தோழியான பள்ளி மாணவியை அவரது பெற்றோர்கள் பள்ளி படிப்பை பாதியிலேயே நிறுத்தி வீட்டில் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. மேலும் அழகு பாண்டி தொடர்ச்சியாக பெண்ணின் ஊருக்கு சென்று பள்ளி மாணவியிடம் மற்றும் அவரது பெற்றோரிடமும் தனது மகளை அனுப்பி வைக்குமாறு கூறி தகராறில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் ஆத்திரமடைந்த பள்ளி மாணவி மற்றும் அவரது பெற்றோர் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அழகு பாண்டி மீது புகார் அளித்தனர் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தொடர்ச்சியாக பள்ளி மாணவிக்கு செல்போன் மற்றும் நேரில் சென்று தொல்லை கொடுத்த காரணத்தினால் அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து அழகுபாண்டியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story