மோட்டார் சைக்கிள்கள் திருடிய சிறுவர்கள் கைது

மோட்டார் சைக்கிள்கள் திருடிய சிறுவர்கள் கைது

மோட்டார் சைக்கிள்கள் திருடிய சிறுவர்கள் கைது

சேலம் சூரமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள்களை திருடிய 4 சிறுவர்களை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.
சேலம் சூரமங்கலம் அருகே காசக்காரனூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மோகனவேல் (வயது 25). இவர் கடந்த மாதம் 26-ந் தேதி இரவு வீட்டின் முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். பின்னர் மீண்டும் மறுநாள் காலை பார்த்தபோது அவரது மோட்டார் சைக்கிள் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் மோகனவேல் புகார் செய்தார்.அதன்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மேனகா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அதில் மோட்டார் சைக்கிள் திருடியது தலைவாசல் அடுத்த வீரகனூரை சேர்ந்த 16 வயதுடைய 3 சிறுவர்கள் மற்றும் கெங்கவல்லியை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த 4 சிறுவர்களையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் சம்பவம் நடந்த அதே நாளில் அம்மாப்பேட்டை உடையாப்பட்டி கக்கன்காலனியை சேர்ந்த சுந்தர் (வயது 38) என்பவரது மோட்டார் சைக்கிளையும், கடந்த 31-ந் தேதி காரிப்பட்டி சின்னகவுண்டாபுரத்தில் பூவரசன் (34) என்பவரது மோட்டார் சைக்கிளையும் திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து கைதான சிறுவர்களிடம் இருந்து 4 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் கைதான சிறுவர்களை சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

Tags

Next Story