விபத்தில் சிக்கி மூளைச் சாவு - சிறுவனின் உடல் உறுப்புகள் தானம்

விபத்தில் சிக்கி மூளைச் சாவு -  சிறுவனின் உடல் உறுப்புகள் தானம்

சந்தோஷ்

ஆம்பூர் அருகே விபத்தில் சிக்கி மூளைச் சாவு ஏற்பட்ட சிறுவனின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது.
ஆம்பூர் அருகே உள்ள கொள்ள கோட்டை கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவன் சந்தோஷ். டிசம்பர் 27ஆம் தேதி காலை 9 மணியளவில் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது நாராயண குப்பம் அருகே சாலை விபத்தில் சிக்கி அன்று இரவு 8 மணியளவில் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டிசம்பர் 28 அன்று இரவு 10:15 மணிக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. அவரது தந்தை சௌந்தரராஜன் ஒரு விவசாயி மற்றும் அவரது தாயார் தனலட்சுமி ஒரு இல்லத்தரசி. சந்தோஷுக்கு நித்யா என்கிற திருமணமான ஒரு சகோதரியும், வெங்கடேஸ்வரா என்கிற 11ம் வகுப்பு படிக்கும் சகோதரரும் உள்ளனர். அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முன்வந்துள்ளனர். அவரது இதயம் மற்றும் அவரது இரண்டு நுரையீரல்களும் MGM மருத்துவமனைக்கும், ராணிப்பேட்டை CMC க்கு சிறுநீரகம் ,கல்லீரலும் வழங்கபப்ட்டுள்ளது.என வேலூர் சி எம் சி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story